search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பழைய முறையிலேயே வாடகை வசூலிக்க குடியிருப்புதாரர்கள் சங்கம் கோரிக்கை

    கோவில் மனைகளில் குடியிருப்பவர்களிடம் பழைய முறையிலேயே வாடகை வசூலிக்க வேண்டும் என குடியிருப்புதாரர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
    திருத்துறைப்பூண்டி:

    தமிழக முதல்வருக்கு கோவில்மனை குடியிருப்புதாரர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பி.வி.சந்திரராமன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் காலம் காலமாக வீடுகட்டி  குடியிருந்து வருகின்றனர்.
    அந்தக் குடியிருப்பு மனைகளுக்கு பழைய காலத்திலிருந்தே கோவிலுக்கு ஒரு பகுதி வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த ஆட்சியின்போது சதுர அடி கணக்கில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் அந்த தொகையை செலுத்த இயலாமல் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் திணறி வருகின்றனர்.
    எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு கோவில் மனைகளுக்கு நியாயமான பழைய பகுதி முறையையே நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×