search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    புதுச்சேரியில் பா.ஜனதாவை வலுப்படுத்த வேண்டும்- ஜே.பி. நட்டா அறிவுரை

    புதுவையில்பா.ஜனதா அனைத்து கிளைகளையும் வலுப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஜே.பி. நட்டா காணொலியில் அறிவுரை வழங்கினார்.
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறுகிறது. 

    இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் கிளை அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக தேசிய தலைமை அலுவலகத்தில் இருந்து பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புதுவை உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் வலுப்படுத்துவதற்கான அறிவுரையையும், வழிகாட்டுதலையும் தெரிவித்தார். 

    இதனைத்தொடர்ந்து புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் வலுப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், பாரதீய ஜனதா மாநில துணைத்தலைவர் தங்க.விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள்  கல்யாணசுந்தரம், அசோக்பாபு, வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், மாநில துணைத்தலைவர்கள் செல்வம், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், முருகன் மற்றும் மாநில செயலாளர்கள் ரத்தினவேல், அகிலன், ஜெயந்தி, லதா, சகுந்தலா  மற்றும் மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள், தொகுதி பெறுப்பாளர்கள், தொகுதி கிளைகளை வலுப்படுத்தும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×