search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    செங்கல்பட்டில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது- பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

    செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் வடபாதிகிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது55). இவரது கணவர் மருதன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்கள். கோவிந்தம்மாள் மட்டும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அரசு தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

    இதில் சிக்கிய கோவிந்தம்மாளின் தலை மற்றும் உடல் முழுக்க பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×