என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அன்னதானத்திற்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன- இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
Byமாலை மலர்25 May 2022 9:53 AM GMT (Updated: 25 May 2022 9:53 AM GMT)
அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கையடக்க கருவி பயன்படுத்தி கட்டணச் சீட்டுகள் அளிப்பது கோவில்களின் நிர்வாகத்தில் வரவினங்களில் வெளிப்படை தன்மையை மேம்படுத்தும் என்பதால் அன்னதானத் திட்டம் நடைபெறும் கோவில்கள் டி.சி.பி. மூலம் வருவாய் வரும் கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களிலும் தேவைக்கேற்ப கையடக்க கருவிகளை பெற்றுக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அன்னதானத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள கோவில்கள் அனைத்திலும், அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் அன்னதானக் கூடத்தில் ஒரு கையடக்க கருவி இருக்க வேண்டும்.
இதனை பக்தர்கள் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளான திருமண நாள், பிறந்தநாள், நட்சத்திர நாள் அன்று கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க நன்கொடை அளிக்கலாம். அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கையடக்க கருவி பயன்படுத்தி கட்டணச் சீட்டுகள் அளிப்பது கோவில்களின் நிர்வாகத்தில் வரவினங்களில் வெளிப்படை தன்மையை மேம்படுத்தும் என்பதால் அன்னதானத் திட்டம் நடைபெறும் கோவில்கள் டி.சி.பி. மூலம் வருவாய் வரும் கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களிலும் தேவைக்கேற்ப கையடக்க கருவிகளை பெற்றுக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அன்னதானத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள கோவில்கள் அனைத்திலும், அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் அன்னதானக் கூடத்தில் ஒரு கையடக்க கருவி இருக்க வேண்டும்.
இதனை பக்தர்கள் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளான திருமண நாள், பிறந்தநாள், நட்சத்திர நாள் அன்று கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க நன்கொடை அளிக்கலாம். அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X