என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஞ்சு மரம் வெட்டி அகற்றம்
Byமாலை மலர்25 May 2022 9:35 AM GMT (Updated: 25 May 2022 9:35 AM GMT)
புதுவை ஆட்டுப்பட்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பஞ்சு மரம் வெட்டி அகற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ஆட்டுப்பட்டியில் பழமையான பஞ்சு மரம் உள்ளது. பட்டுப்போன நிலையில் இருந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மரத்தை பாதுகாப்பாக வெட்டி அகற்ற வேண்டும் என ஆட்டுப்பட்டி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தனர். இந்த மரத்தை வெட்டி அகற்ற புதுவை தீயணைப்பு துறையினர் முடிவெடுத்தனர்.
இதையடுத்து இன்று தொகுதி எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தோஷ் சந்திரா, மின்துறை, வனத்துறை அதிகாரிகள் அந்த மரத்தை பார்வையிட்டு வெட்டி, அகற்றும் பணியில் இறங்கினர். மரத்தின் கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டிய பின் மரத்தை வெட்ட தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த பணியில் புதுவை தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன், தீயணைப்பு வீரர்கள் சரவணன், கோதண்டபாணி, ஆனந்தன், பிரபாகரன், குமார், சூசைநாதன், பத்மநாபன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X