search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சு மரத்தை வெட்டி அகற்றும் காட்சி.
    X
    பஞ்சு மரத்தை வெட்டி அகற்றும் காட்சி.

    பஞ்சு மரம் வெட்டி அகற்றம்

    புதுவை ஆட்டுப்பட்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பஞ்சு மரம் வெட்டி அகற்றப்பட்டது.




    புதுச்சேரி:

    புதுவை ஆட்டுப்பட்டியில் பழமையான பஞ்சு மரம் உள்ளது. பட்டுப்போன நிலையில் இருந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மரத்தை பாதுகாப்பாக வெட்டி அகற்ற வேண்டும் என ஆட்டுப்பட்டி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தனர். இந்த மரத்தை வெட்டி அகற்ற புதுவை தீயணைப்பு துறையினர் முடிவெடுத்தனர். 

    இதையடுத்து இன்று தொகுதி எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தோஷ் சந்திரா, மின்துறை, வனத்துறை அதிகாரிகள் அந்த மரத்தை பார்வையிட்டு வெட்டி, அகற்றும் பணியில் இறங்கினர். மரத்தின் கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டிய பின் மரத்தை வெட்ட தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர். 

    இந்த பணியில் புதுவை தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன், தீயணைப்பு வீரர்கள் சரவணன், கோதண்டபாணி, ஆனந்தன், பிரபாகரன், குமார், சூசைநாதன், பத்மநாபன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×