என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்24 May 2022 11:12 AM GMT (Updated: 24 May 2022 11:12 AM GMT)
கடலூர் அருகே மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
வங்கி எழுத்தர் பணிக்கு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து திராவிட கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மண்டல இளைஞர் அணி செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். மாணவர் கழகம் மண்டல செயலாளர் பண்பாளன், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், இளைஞரணி செயலாளர் வேலு, மகளிர் அணி பாசறை தலைவர் தமிழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை அற்றினார். இதில் நிர்வாகிகள் தாமோதரன், தண்டபாணி, சிவகுமார், மணிவேல், ரமா பிரபா ஜோசப், தமிழன்பன், இராவணன், பெரியார் செல்வன், முனியம்மாள், எழிலேந்தி, இராமநாதன், மாணிக்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன முடிவில் நகர செயலாளர் சின்னதுரை நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X