search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரசை செயல்பட கவனம் செலுத்துங்கள்- வைத்திலிங்கம் எம்.பி. அறிவுரை

    காங்கிரஸ் ஆட்சியை குறைகூறுவதை நிறுத்திவிட்டு அரசை செயல்பட கவனம் செலுத்துங்கள் என்று வைத்திலிங்கம் எம்.பி. அறிவுரை கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவைகாங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து ஓராண்டுக்கு பிறகு புதுவை அரசு ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது. நான் கேட்டுக் கொண்ட பிறகே  இந்த கூட்டத்தை நடத்தியுள்ளனர். பாராளுமன்றத்திலேயே ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக எம்.பி.க்களையும் அழைத்தே கூட்டம் நடத்த  வேண்டும், தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

    ஆனால் புதுவையில் நடந்த கூட்டத்தில் 2 
    எம்.பி.க்களையும்  அழைக்கவில்லை. இதுகுறித்து பாராளுமன்றத்தில் நான் புகார் செய்ய உள்ளேன். கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர், கடந்த ஆட்சியில் செய்த  காலதாமதத்தால் திட்டங்கள் செயல்படுத்தவில்லை என கூறியுள்ளார். 

    முதலில் ஸ்மார்ட் திட்டத்தை எங்கே அமல்படுத்துவது? என்பதில்  குழப்பம் ஏற்படுத்தியதே தற்போதைய முதல்-அமைச்சர்தான். உழவர்கரை நகராட்சியிலா? சேதராப்பட்டிலா? என அவருக்கு குழப்பம் 
    இருந்தது. காங்கிரஸ் அரசு அமைந்த பிறகுதான் தெளிவான முடிவெடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பெற்றோம். 

    அதேபோல வீடுகட்டும்  அளவை அதிகப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். வீடு கட்டும் அளவை முடிவு செய்தது யார்? குறைந்த சதுர அடியில் வீடு கட்டி  அதிகமானவர்களுக்கு கொடுக்க வேண்டும்? என முடிவு செய்தது யார்? அவருக்கு அருகாமையில் இருந்த 2 அமைச்சர்களிடம் கேட்டறிந்தால் தெரிந்தி ருக்கும். 

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ.100 கோடி, மாநில அரசு ரூ.100 கோடி என 5 ஆண்டுகளில்  ரூ.ஆயிரம் கோடி செலவிட வேண்டும். எங்கள் ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியிருந்தோம். மத்திய அரசின்  ரூ.100 கோடியுடன் மொத்தம் ரூ.160 கோடி நிதி இருந்தது. 

    இந்த அரசு அமைந்து ஓராண்டாகியும் நிதி ஒதுக்க வில்லை. ரூ.160 கோடியிலும்  ரூ.41 கோடிக்கு மட்டுமே வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அங்கு பணியாளர்கள் இல்லாததும் ஒரு குறையாகும். 

    பிரதமரின்  கிராமப்புற இணைப்பு சாலை திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தருகிறது. இதில் புதுவையில் 50 கிமீ.,க்கு சாலை பணிகள் நடைபெற  வேண்டும். இதில் கால்வாசி பணிகள் கூட நடக்கவில்லை. காரைக்காலில் இத்திட்டத்தையே தொடங்க வில்லை. 

    ஆனால் நிதியில்லை என  முதல்-அமைச்சர் தெரிவிக்கிறார். மத்திய அரசிடம் கிடைக்கக்கூடிய நிதியை பெறக்கூட இந்த அரசு தயாராக இல்லை. இனி கடந்த கால அரசை  குறைசொல்வதை நிறுத்திவிட்டு, உங்கள் அரசு என்ன செய்யப்போகிறது? என கவனம் செலுத்துங்கள். 

    செயல்படாமல் உள்ள அரசை ெசயல்படுத்துங்கள். எங்கள் ஆட்சியில் தற்போதுள்ள உள்துறை மந்திரிதான் பவர்புல்லாக இருந்தார். அவரிடம்தான் அனைத்து துறையும்  இருந்தது. எனவே கடந்த ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தாதது யார்? என மக்களுக்கு தெரியும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×