என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
Byமாலை மலர்24 May 2022 9:32 AM GMT (Updated: 24 May 2022 9:32 AM GMT)
ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் அருகே செல்போன் டவர் உள்ளது. நள்ளிரவு 1 மணியளவில் ஒரு வாலிபர் அந்த செல்போன் டவரில் ஏறி நின்றார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் தீயணைப்பு படையினருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
பின்னர் அந்த வாலிபரை செல்போன் டவரில் இருந்து பாதுகாப்பாக இறக்கி சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே அந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடி விட்டார்.
இந்த நிலையில் அதே வாலிபர் 11 மணியளவில் ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டையில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் இதுபற்றி கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மின்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டிக்க செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரை போலீசார் கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் கீேழ இறங்க மறுத்து அங்கேயே நின்றுகொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் ஒரு மணி நேரம் போராடி அந்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். விசாரணையில் அவர் புதுவை தமிழக பகுதியான பெரியமுதலியார் சாவடியை சேர்ந்த அய்யப்பன் (வயது26) என்பதும், திருமணமாகாத இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை ரெயில் நிலையத்தில் மின் கம்பத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் ஏறி அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X