search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதனை விளக்க கூட்டத்தில் பொதுமக்களுக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் வழங்கினார்.
    X
    சாதனை விளக்க கூட்டத்தில் பொதுமக்களுக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் வழங்கினார்.

    தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

    வைத்தீஸ்வரன்கோயிலில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    சீர்காழி:

    வைத்தீஸ்வர ன்கோயிலில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் செயலாளர் அன்புச்செழியன்தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள்பிரபாகரன், சசிக்குமார், செல்லசேது ரவிக்குமார், மலர்விழி, நகர செயலாளர் சுப்பராயன், பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெ க்சாண்டர் வரவேற்றார். 

    கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, ராமலிங்கம் எம்.பி. ஆகியோர் திமுக அரசின் சாதனைகள் குறித்து பேசினர். , மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 4 ஆண்டுகளாக வழங்கப்படாத தாலிக்கு தங்கம் வழங்கும் நலத்திட்ட உதவியை தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற உடன் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டத்தை ஒரே ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. 

    கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்க ப்படாத இலவச மின்சார இணைப்பு ஓராண்டில் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் உள்ளிட்ட ஓராண்டில் பல்வேறு சாதனை திட்டங்களை தி.மு.க அரசு செயல்படுத்தியுள்ளது என்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், வீட்டு உபயோகபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
    Next Story
    ×