என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயம்
பொதுத்தேர்வு எழுத சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயம்
பொதுத்தேர்வு எழுத சென்ற 10-ம் வகுப்பு மாணவி மாயமானார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10-ம் வகுப்பிற்கு அரசு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. நேற்று காலை வழக்கம்போல் தேர்வு எழுத சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை. இது குறித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
வெம்பக் கோட்டை அருகே உள்ள சத்திர ப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகள் பி.காம் பட்டதாரி. சம்பவத்தன்று விருதுநகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு செல்வ தாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பாமல் மாயமா னார். இதுகுறித்து வெம்பக் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திக் குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்ற மாணவி திடீரென மாயமானார். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






