என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் உறவினரின் மண்டை உடைப்பு

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்- தம்பி கேசவன் மற்றும் சந்தோசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் திருமலையப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 23).தொழிலாளி.

    இவரது உறவினர் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவன் என்கிற அஜித் (27). கூலி தொழிலாளி  இவரது தம்பி சந்தோஷ் (23). தனியார் நிறுவன சூப்பிரவைசர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேசவனின் நண்பர் ஒருவரின் செல் போன் திருட்டு போனது. இதனை மதன்குமார் தான் திருடி இருப்பார் என நினைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.
     
    அதன் பின்னர் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.  சம்பவத்தன்று மதன்குமார்  கண்ணம்பாளையம் திரு.வி.க நகர் பகுதியில் நின்றிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு  வந்த கேசவன் மற்றும் அவரது தம்பி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கேசவன் மற்றும் சந்தோஷ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாறியாக தாக்கினர். பின்னர் தாங்கள் வைத்திருந்த மது பாட்டிலாள் மதன் குமாரின் மண்டையை உடைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து மதன்குமார் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்- தம்பி கேசவன் மற்றும் சந்தோசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×