search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சூளகிரி அருகே 3 கோவில்களில் திருடியவர் கைது

    சூளகிரி அருகே 3 கோவில்களில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
    சூளகிரி,

     கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா அத்தி முகம் கிராமத்தில் ஊர் மத்திய பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், சாலபுரி யம்மன் கோவில், ஒம் சக்தி கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன.  

    இந்தகோவில் களில் நேற்று முன்தினம் நள்ளிரவு   மர்ம நபர் கோவில்களின் முன் கதவு கவுகளை இரும்பு ஆயிதங்களை கொண்டுஉடைத்தார். பின்னர் கோவிலுக்குள் நுழைந்து சூழாயிதம், செம்பு, பித்தலை பொருட்களைஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

    கோவிலில் திருடியது அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்தது. இதனால் அவரை அந்த பகுதி பொதுமக்கள் பிடித்து பேரிகை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  
    இது ெதாடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×