என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நடந்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்
Byமாலை மலர்20 May 2022 10:00 AM GMT (Updated: 20 May 2022 10:00 AM GMT)
திருச்சியில் நடந்து சென்ற வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி:
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு திருச்சி ரெயில்வே பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் இவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயங்களுடன் அவர் உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய ராஜாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடந்து சென்ற வாலிபரை தாக்கிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X