என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூலி தொழிலாளி வீட்டில் புகுந்து பாம்புகள்
Byமாலை மலர்20 May 2022 9:03 AM GMT (Updated: 20 May 2022 9:03 AM GMT)
திருக்கனூர் அருகே கூலி தொழிலாளியின் வீட்டில் புகுந்து படமெடுத்து ஆடிய நல்ல பாம்புகள் பிடிப்பட்டது.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு சரண்யா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயா (வயது 45) கூலித் தொழிலாளி.
7 மணி அளவில் அவரும், அவரது குழந்தைகளும் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்கு சென்றனர்.
அப்போது சலசலவென சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்த போது பாத்திரங்கள் அடுக்கி வைக்கும் இடத்தில் 2 நல்ல பாம்புகள் இருப்பதைக் கண்டு ஜெயா அதிர்ச்சியடைந்தார். பாம்பை பார்த்ததும் அவர் அலறினார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்–பக்கத்தினர் வந்து புதுவை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர் கண்ணதாசன் இரவு 11 மணியளவில் மண்ணாடிப்பட்டு வந்தார். அதற்குள் ஒரு பாம்பு ஓடி விட்டது.
ஒரு நல்ல பாம்பு மட்டுமே சிக்கியது. அதனை லாவகமாக பிடித்த அவர் சாக்கு பையில் போட்டு எடுத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X