என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    பெண்ணிடம் நகையை திருடிய வாலிபர் கைது

    பெண்ணிடம் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:


    முசிறி மேல வடுகபட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி சம்பந்தி. இவர் வீட்டுக்கு குடுகுடுப்பைக்காரன் ஒருவர் வந்துள்ளார். அவர்உ, சம்பந்தியின்  கஷ்டத்தைப் போக்கு வதாக கூறி, கடுகு, விபூதி, தண்ணீர் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.  

    அதில் மாந்த்ரீகம் செய்வதாக கூறி. சம்பந்தி அணிந்திருந்த தாலி காசு, தாலிகுண்டு, குழாய் உட்பட முக்கால் பவுன் நகைகளை அபகரித்து விட்டு ஓடிவிட்டார். 

    இது குறித்து சம்பந்தி கொடுத்த புகாரின் பேரில், முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது, தொட்டியத்தை அடுத்த வடக்கு அரங்கூர் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முத்தையன் (வயது 30) 

    குடுகுடுப்பைக்காரன் போல் வந்து சம்பந்தியை ஏமாற்றி, நகைகளை அபகரித்து சென்றது தெரியவந்தது. 
    இதனையடுத்து முசிறி போலீசார் முத்தையனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் . 
    Next Story
    ×