என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராஜீவ் கொலையாளிகளை இறைவன் மன்னிக்க மாட்டான்- காங்கிரஸ் கட்சி கருத்து
Byமாலை மலர்19 May 2022 8:57 AM GMT (Updated: 19 May 2022 8:57 AM GMT)
ராஜீவ் காந்தி கொலையாளிகளை இறைவன் மன்னிக்க மாட்டான் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
ராஜீவ் கொலையாளியான பேரறிவாளனை சுப்ரீம்கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று காங்கிரஸ் சார்பில் மாவட்டந்தோறும் மவுன போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் புதுவையில் காங்கிரஸ் எம்.பி.வைத்திலிங்கம் பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை நீதிமன்றம் மன்னித்தாலும் இறைவன் மன்னிக்க மாட்டான்.
நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனை. காங்கிரஸ் பேரியக்கத்திற்கு நேற்றைய தினம் கருப்பு தினம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவை முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
இந்திய அரசின் எதிர்கால விடிவெள்ளியாக திகழ்ந்தவர் வெளியுறவு மற்றும் அணுகுண்டு கொள்கையில் திறம்பட செயல்பட்டவர், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் ராஜீவ்காந்தி.
அவரின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியாதது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மன்னித்தாலும் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன், மன்னிக்க மாட்டான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X