என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழிலாளியை சாராய பாட்டிலால் தாக்கிய வாலிபர்
Byமாலை மலர்19 May 2022 5:01 AM GMT (Updated: 19 May 2022 5:01 AM GMT)
ஏ.பி.சி.டி. தெரியாது என கூறியதால் கூலி தொழிலாளியை சாராய பாட்டிலால் தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே சுத்துகேணி புதுநகரை சேர்ந்தவர் மாணிக்கம். கூலி தொழிலாளி. இவர் அங்குள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் வாங்கி குடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சாராயம் குடித்துக்குகொண்டிருந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த சத்யராஜ்(வயது31) என்பவர் மாணிக்கத்திடம் பேச்சு கொடுத்தார். இருவரும் மது குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மாணிக்கத்திடம் சத்யராஜ் ஏ.பி.சி.டி. தெரியுமா? என கேட்டார். அதற்கு மாணிக்கம் தனக்கு எதுவும் படிக்க தெரியாது என தெரிவித்தார். ஏ.பி.சி.டி. தெரியாமல் இத்தனை காலம் ஏன் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என கூறி மாணிக்கத்திடம் சத்யராஜ் தகராறு செய்தார்.
இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த சத்யராஜ் தான் குடித்துக் கொண்டிருந்த சாராய பாட்டிலை எடுத்து மாணிக்கத்தின் தலையில் தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மாணிக்கம் மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X