என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராணிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்17 May 2022 9:41 AM GMT (Updated: 17 May 2022 9:41 AM GMT)
ராணிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் கொன்னம்மா குட்டைத் தெருவை சேர்ந்த சந்தோஷ் (வயது 34) கூலித் தொழிலாளி. இவருக்கு துர்கா என்ற மனைவியும் 9 வயது மகளும் 5 வயது மகனும் உள்ளனர்.
சந்தோஷ் கடந்த 6 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்பத்தினர் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை மோசமானதால் மனமுடைந்த சந்தோஷ் அவரது வீட்டின் உள் பக்கமாக தாழ்பாள் போட்டு கொண்டு கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சந்தோஷின் மனைவி துர்கா ராணிப்பேட்டை போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜான் சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X