search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த கலெக்டர் லலிதா.
    X
    பள்ளியில் மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த கலெக்டர் லலிதா.

    பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.89.83 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியந்துரை, காட்டூர், மேகந்தி ரபள்ளி, ஆலாலசு ந்தரம், பனங்குடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். 

    மேலும் புளியந்துரை கிராம ஊராட்சி பெரிய தெரு பகுதியில் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும், அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணி, ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நூலக புதுப்பிக்கும் பணி, ரூ.4.65 லட்சம் மதிப்பீட்டில் 15- வது நிதிக்குழு திட்டத்தில் நடைபெற்ற சமத்துவ இடுகாடு பணி,  ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கழிவுநீர் போக்கு குழி பணி, ரூ.2.76 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாரத பிரமதரின் வீடு கட்டும் திட்ட பணி, காட்டூர் கிராம ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று முடிந்த தடுப்பணை பணி, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் நீர் உறுஞ்சும் குழி வெட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரண சந்திரன் மற்றும் பொறியாளர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×