என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்குறிச்சியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கொள்ளையன் கைது

    தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த கொள்ளையனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்கிற சன் கதிரவன் (வயது 40) என்பவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருக்கோவிலூர் அருகே மண்டபத்தைச் சேர்ந்த சேட்டு என்பவரது வீட்டில் கதவை உடைத்து நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் திருக்கோவிலூர் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 பவுன் நகை கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேலும் இவர் மீது திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், இவர் வெளியே இருந்தால் வரும் காலங்களில் தொடர்ந்து இது போன்ற குற்றசெயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சன்கதிரவனை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருக்கோவிலூர் போலீசார் குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×