search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் பலியான அருள்சாமி
    X
    விபத்தில் பலியான அருள்சாமி

    ஜெயங்கொண்டத்தில் கார் மோதி முதியவர் பலி

    ஜெயங்கொண்டத்தில் கார் மோதி முதியவர் பலியானார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூசையப்பர்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (வயது70).  

    இவர் தனது சொந்த வேலை காரணமாக சூசையப்பர் பட்டினத்திலிருந்து ஜெயங்கொண்டம் சென்றுவிட்டு மீண்டும் சூசையப்பர்பட்டினம் நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.  

    அப்போது திருச்சி - சிதம்பரம் சாலையில் ஜெயங்கொண்டம் சூரியமணல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த கார் முதியவர் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. 

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்சாமி பரிதாபமாக இறந்தார்.  

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×