search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காப்பீடு திட்டம்
    X
    காப்பீடு திட்டம்

    பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம்

    விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட  கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது ஒரு உறுப்பினர் ஆண்டுக்கு   ரூ.330 பிரீமியம் செலுத்தி ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில்   இணைந்து கொள்ளலாம். மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது.   

    காப்பீட்டுக் காலம் ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை  ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் கவரேஜ் தானாகவே   புதுப்பிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டு கவரேஜ்   காலத்தின் மே 31 அல்லது அதற்கு முன் அவரவர் வழங்கிய விருப்பத்தின்படி   சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு தவணையில் தானாகப் பற்று  வைக்கப்படும். பிரீமியம் ஆண்டுக்கு ரூ.330 ஆகும். 

    இத்திட்டத்தில் 18 வயது  முதல் 50 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். எந்தவொரு   காரணத்திற்காகவும் காப்பீடு செய்தவர் மரணம் அடைந்தால் இந்தத்   திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வாரிசுதாரர்களுக்கு  வழங்கப்படும். 

    பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது விபத்துக் காப்பீட்டுத்  திட்டமாகும், இது விபத்து மரணம் மற்றும் இயலாமைக்கான காப்பீட்டுத்  திட்டமாகும். காப்பீட்டு காலம் ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே 31 வரை ஒரு  வருடத்திற்கு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு தானாகவே  புதுப்பிக்கப்படும். ஆண்டுக்கு ரூ.12 பிரீமியம் தொகை ஆகும்.  

    இத்திட்டத்தில் வயது - 18 முதல் 70 வயது வரை சேர்ந்து பயன்பெறலாம்.   இத்திட்டத்தின் கீழ் விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம். ஊனமுற்றோருக்கு ரூ.1  லட்சம் வாரிசுதாரர்களுக்கு  வழங்கப்படும். இந்த இரண்டு திட்டத்திற்கான புதுப்பிப்பு காலம் மே மற்றும் ஜூன்   மாதங்களில் தானாக வங்கிகளின் மூலம் புதுப்பிக்கப்படும். எனவே  

    இத்திட்டத்தில் உள்ள பயனாளிகள் இந்த இரண்டு மாதங்களிலும்  தங்கள் வங்கி   கணக்கில் போதுமான இருப்பு தொகையினை வைத்து தொடர்ந்து, இத்திட்டத்தினை   பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும்   இத்திட்டத்தில் இணையாத பொதுமக்கள் உடனடியாக இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்இ வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×