search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்போரூர் முருகன் கோவில்
    X
    திருப்போரூர் முருகன் கோவில்

    திருப்போரூர் முருகன் கோவிலில் ரூ.35 லட்சம் உண்டியல் வசூல்

    திருப்போரூர் முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் இடத்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    திருப்போரூர்:

    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் பணம் மற்றும் நகை, வெள்ளிப்பொருட்களை காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் நேற்று கோவில் ஆய்வாளர் பாஸ்கர், செயல் அலுவலர்கள் வெங்கடேசன், சக்திவேல், சரவணன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டன.

    பின்னர் கோவில் வளாகத்தில் கோவல் ஊழியர்கள், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் காலை முதல் மாலை 6 மணிவரை எண்ணப்பட்டன. இதில் பணமாக 35 லட்சத்து 15 ஆயிரத்து 46ம் சில்லரை காசுகளாக 6 லட்சத்து 49 ஆயிரத்து 342ம் ஆக மொத்தம் 41 லட்சத்து 64 ஆயிரத்து 802 கிடைத்தது. மேலும் தங்கம் 290 கிராம், வெள்ளி 4990 கிராம் காணிக்கையாக கிடைத்தன. முன்னதாக உண்டியல் எண்ணும் இடத்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×