என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் சோமசுந்தரம் கிராமத்தில் ஸ்ரீ சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷத்தை சிறப்பு பூஜை காட்சி
சோளிங்கர் அடுத்த சோமசுந்தரம் கிராமத்தில் ஸ்ரீ சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ விழா
சோளிங்கர் அடுத்த சோமசுந்தரம் கிராமத்தில் ஸ்ரீ சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
சோளிங்கர்,
ராணிப்பேட்டைமாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவில் உள்ள சிவலிங்கத்திற்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அருகம்புல் பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






