என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மில்லை நவீனப்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் பா.ம.க. வலியுறுத்தல்
மூடும் முடிவை கைவிட்டு பாரதி-சுதேசி மில்லை நவீனப்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-
புதுவை மாநில மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த சூழலில் புதுவை நகர பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சுதேசி மற்றும் பாரதி மில் மூடும் அறிவிப்பை இந்த அரசு திரும்பப்பெற வேண்டும்.
புதுவை மாநிலத்தில் சொல்லப்படும் அடையா–ளங்களில் ஒன்றான சுதேசி மற்றும் பாரதி மில்களை நவீனப்படுத்தி மீண்டும் திறந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்போம் என்று சொல்லிஆட்சிக்கு வந்து விட்டு இப்பொழுது இந்த 2 மில்களையும் மூடும் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலை.
ஏற்கனவே புதுவையில் அரசு வேலை செய்வதாக நம்பி சம்பளம் கொடுக்காமல் பல ஆயிரம் இளைஞர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர். எனவே பாரதி மற்றும் சுதேசி மில் போன்ற உற்பத்தி சார்ந்த தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்கினால் இளைஞர்களுக்கு வேலையும், நல்ல சம்பளமும் கொடுக்க முடியும். மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று புதுவையில் உள்ள 2 மில்களையும் இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story






