என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.ஐ.டி.யூ. வியாபாரிகள் அண்ணா சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யூ. வியாபாரிகள் ஊர்வலம்-முற்றுகை
நகராட்சியை கண்டித்து சி.ஐ.டி.யூ. வியாபாரிகள் ஊர்வலம், முற்றுகையில் ஈடுபட்டனர். இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி மூலம் அடிக்காசு வசூல் செய்யப்பட்டு வந்தது. அடி கணக்கை கொண்டு ரூ.10 முதல் ரூ20 வரை வசூல் செய்யப்பட்டது.
தற்போது நகராட்சி அடிக்காசு வசூல் செய்வதற்கு டென்டர் விட்டு தனியார் மூலம் வசூல் செய்து வருகிறது. இதனால் அடிக்காசு வசூலிப்பவர்கள் ரூ.50 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், அடிக்காசை தனியார் வசூல் செய்யும் போக்கினை கண்டித்தும் தனியாருக்கு டெண்டர் விட்ட நகராட்சி ஆணையரை கண்டித்தும். சி.ஐ.டி.யூ மற்றும் புதுவை பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதற்காக காமராஜர் சிலை அருகில் சி.ஐ.டியூ. சாலையோர வியாபாரிகள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். போத்தீஸ் அருகே அவர்கள் வந்தபோது ஒதியஞ்சாலை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் ஊரேவலத்தில் வந்தவர்களுக்கும் இடையில் வாய்தகராறும், லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
பின்னர் வியாபாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 2 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் சிஐடி யூ நிர்வாகிகள் சீனுவாசன் பிரபுராஜ் மதிவாணன் கொளஞ்சியப்பன் ராஜ்குமார் சாலையோர சங்க நிர்வாகிகள் அழகுராஜ் வடிவேல் வீரமணிகண்டன் சேவியர் சூரியன் கேம்ராஜ் சுரேஷ் ராமசாமி ரவி அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






