என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![புதுவையில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி. புதுவையில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.](https://img.maalaimalar.com/Articles/2022/May/202205121509051603_Tamil_News_Pondicherry-NewsSavarma-banned-sale_SECVPF.gif)
X
புதுவையில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.
சவர்மா விற்பனைக்கு தடை?
By
மாலை மலர்12 May 2022 9:39 AM GMT (Updated: 12 May 2022 9:39 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
புதுவையில் சவர்மா விற்பனைக்கு தடை? உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
புதுச்சேரி:
கேரளாவில் கோழி இறைச்சியை கொண்டு தயாரிக்கப்படும் சவர்மா சாப்பிட்டவர் இறந்தார்.
தமிழகத்திலும் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து புதுவையில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட நகர பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 27 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு தனியார் ஓட்டலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கனில் அளவுக்கதிகமாக கலர்பவுடர் சேர்க்கப்பட்டு இருந்ததால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பினாயில் மற்றும் உப்பைகளை கொட்டி அழித்தனர்.
பஸ்நிலையம் அருகே அனைத்து கடைகளிலும் சிக்கனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். சுமார் 50 கிலோவுக்கு மேல் சிக்கன் அழிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறை செயலர் உதயகுமார் கூறும்போது, பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு வகைகளை செய்து விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் புதுவையில் சவர்மாவுக்கு தடை விதிக்கப்படும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)