search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து

    மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் வி.பி.சிங். நகர் காந்திவீதியை சேர்ந்தவர் சிவலிங்கம். (வயது41) கட்டிடத் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவலிங்கம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது ஜான் என்பவர் சிவலிங்கத்துக்கு அறிமுகமானார். 

    பின்னர் இருவரும் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தானர்.

    இந்த நிலையில் சிவலிங்கம் அதே மதுக்கடையில் மது அருந்த சென்றார். அப்போது ஜான் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் சிவலிங்கத்திடம் தகராறு செய்தனர். 

    தகாத வார்த்தைகளால் திட்டிய ஜான் என்னிடமே பிரச்சினை செய்கிறாயா என கூறி சிவலிங்கத்தை சரமாரியாக தாக்கினார். மேலும் ஜானுடன் வந்தவர் சிவலிங்கத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். 

    அப்போது ஜான் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சிவலிங்கத்தின் தலையில் தாக்கி கழுத்தில் குத்தினார். 

    பின்னர் இருவரும் எங்களிடம் இனிமேல் வைத்துக் கொண்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் பலத்த காயம் அடைந்த சிவலிங்கம் சிகிச்சைகாக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

    இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான் மற்றும் அவரது கூட்டாளியை தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×