search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மோட்டார் சைக்கிள்கள் மோதி 4 பேர் படுகாயம்

    செம்பனார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் அருகே மயிலாடுதுறை தாலுக்கா நல்லத்துக்குடி கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த இந்திரன் (வயது 20), கபிலன் (25). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில்  செம்பனார்கோவிலில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர்.

    அப்போது செம்பனா ர்கோயில் போலீஸ் நிலையம் அருகே ஆறுபாதி மேட்டிருப்பு பகுதியில் சென்றபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் காளகஸ்திபுறம் மெயின் ரோட்டை சேர்ந்த மணியரசன்குமார் (20), ஆறுபாதி, புதுத்தெரு மேட்டுருப்பு பகுதியை சேர்ந்த முருகேசன் (20), ஆகிய இருவரும் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் 4 பேரும் பலத்த காயம் அடைந்ததனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் இந்திரன் மேல் சிகிச்சைக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரிமருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    மணியரச ன்குமாருக்கு காலில் ஒருவிரல் துண்டாகிய  நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×