என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
தியாகதுருகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்திக்குள்ளானதில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொண்டங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் மாரிமுத்து (வயது 37) இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று தியாக துருகம் அருகே விருகாவூர் பகுதிக்கு சென்ட்ரிங் வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது நாகலூர் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி சுதா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொண்டங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் மாரிமுத்து (வயது 37) இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று தியாக துருகம் அருகே விருகாவூர் பகுதிக்கு சென்ட்ரிங் வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது நாகலூர் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி சுதா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






