என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
அரக்கோணம் அருகே ஏரியில் வட மாநில வாலிபர் உடல் மீட்பு
அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி வட மாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
அரக்கோணம் அடுத்த அம்மனூர் பெரிய ஏரியில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் 30 வயது மதிக்க தக்க நபர் ஒருவர் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றபோது திடீரென நீரில் மூழ்கினார். இதனை கண்ட அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக தேடியும் உடல் கிடைக்காததால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆழ்நிலை நீர் மூழ்கி வீரர்களுடன் 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சம்பவம் நடந்த ஏரியில் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடலுக்கு பின் மாலை 4 மணியளவில் 15 மணி நேரத்திற்கு பின் பிணமான வாலிபர் உடலை மீட்டனர்.
மேலும், அரக்கோணம் டவுன் போலீசார் சடலத்தை கைபற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினர்.
மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபர் என்றும் கடந்த சில நாட்களாக அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதி மற்றும் அம்மனூர் பகுதிகளில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எப்படி இப்பகுதிக்கு வந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






