என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செல்லியம்மன் கோவில் சித்திரை தேர்திருவிழா
Byமாலை மலர்11 May 2022 9:08 AM GMT (Updated: 11 May 2022 9:08 AM GMT)
அரியலூர் அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த திங்கட்கிழமை 23-ந்தேதி ஐயனார் கோவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நாள் தோரும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் காலை மாலை இரண்டு வேலையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவிழாவில் மூன்றாம் நாள் படைத்தேர் விழாவும் ஏழாம் நாள் மாதிரி தேரோட்ட விழாவும் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிராமமக்கள் தேர்கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
கூலி ஆட்கள் இல்லாமல் சிறுகடம்பூர் கிராம மக்களே இணைந்து தேரின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டு தேரினை இழுத்து செல்வது இந்த ஊர் தேர் திருவிழாவின் தனிச் சிறப்பு ஆகும்.
அதன்படி தேர் கட்டுமானப் பணிகள் முடிந்து தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்டது. விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி தங்களது நிலங்களில் விளைந்த முந்திரி, மா, பலா ஆகியவற்றை கயிறுகளில் கோர்த்து தேரில் கட்டி தொங்கவிட்டனர்.
அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட செல்லியமனையும் மாரியம்மனையும் அருகருகே தேரில் ஏற்றி அமர்த்தினார்கள். அதன் பின்னர் காலை ஒன்பது மணிக்கு தேர் பொது மக்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.
ஏரிக்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில் சன்னதியில் இருந்து புறப்பட்ட தேர் பிள்ளையார் கோயில் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட தேரோடும் 4 முக்கிய வீதிகள் வழியாக மாலை சந்நிதியை வந்தடைந்தது.
தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர் சன்னதியை அடைந்ததும் ஆண்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சனமும், பெண்கள் நடை கும்பிடு போட்டும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள்.
நாளை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு இரும்புலிக்குறிச்சி போலீசார் பலத்த
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X