search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர்.
    X
    கார்த்திக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர்.

    அரியலூர் வீரர் இந்திய ஆக்கி அணிக்கு தேர்வு

    அரியலூரை சேர்ந்த வீரர் இந்திய ஆக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் நகரை சேர்ந்த கார்த்திக். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருடைய தந்தை செல்வம், வங்கியில் இரவு நேர காவலராக பணியாற்றி தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலராக பணியாற்றி வருகிறார். 

    தாய் வளர்மதி வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்து கார்திக்கை படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் 7 ஆம் வகுப்பு வரை அரியலூரில் உள்ள தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். பின்னர் சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் 7 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 

    பின்னர் கார்த்திக்கின் விளையாட்டு திறனை பார்த்த திருச்சி தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கார்த்திக்கை அழைத்து விளையாட்டு திறனை மேம்படுத்தியுள்ளார். பின்னர் விளையாட்டு திறனை பார்த்த கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து வருகிறார். அங்கிருந்து அவரது விளையாட்டு திறனை பார்த்த பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

    முதலில் எக்லான்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். தற்போது இந்தோனேஷியால் நடைபெறயிருக்கும் ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் முன்கள ஆட்டக்காரராக விளையாட‌ தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    இப்போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடக்க போட்டி பாகிஸ்தானுடன் விளையாட உள்ளதாக தெரிகிறது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் விளையாட்டுக்காக தன்னுடைய விடா முயற்சியில் மற்றும் தன்னுடைய ஆட்ட திறனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு அரியலூருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    Next Story
    ×