search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வுசெய்த திட்ட இயக்குனர்
    X
    வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வுசெய்த திட்ட இயக்குனர்

    தியாகதுருகம் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வுசெய்த திட்ட இயக்குனர்

    தியாகதுருகம் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக திறந்த வெளி கிணறு வெட்டும் பணியை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பகுதியில் உள்ள முடியனூர், விருகாவூர், வேளாக்குறிச்சி, பொரசக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகளை திட்ட இயக்குநர் மணி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், தார் சாலை மற்றும் ஜல்லி சாலைகள் அமைக்கும் பணி, புதிய குடிநீர் கிணறு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் கிணறுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாகவும்,விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். மேலும் வேளாக்குறிச்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் எனவும், மேலும் பொதுமக்களுக்கு குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து அதே பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக திறந்த வெளி கிணறு வெட்டும் பணியை ஆய்வு செய்தார். பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், கோபி, விஜயன், பணி மேற்பார்வையாளர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர்கள் சிவக்குமார், முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×