என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரிஷிவந்தியத்தை தாலுக்காவாக அறிவிக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
Byமாலை மலர்10 May 2022 10:23 AM GMT (Updated: 10 May 2022 10:23 AM GMT)
ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து ரிஷிவந்தியம் தொகுதி வானாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சங்கராபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானாபுரத்தை தாலுகாவாக அறிவித்துள்ளதை கண்டித்தும், சங்கராபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரிஷிவந்தியத்தை தலைமை இடமாக கொண்டு தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்றும் ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரிஷிவந்தியம் உள்பட 10 கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடும்ப அட்டையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், குடும்ப அட்டையை யாரும் ஒப்படைக்க வேண்டாம், மாறாக கோரிக்கை தொடர்பாக 10 பேர் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கலாம் என்றனர். இதையடுத்து கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 10 பேர் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து ரிஷிவந்தியம் தொகுதி வானாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சங்கராபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானாபுரத்தை தாலுகாவாக அறிவித்துள்ளதை கண்டித்தும், சங்கராபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரிஷிவந்தியத்தை தலைமை இடமாக கொண்டு தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்றும் ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரிஷிவந்தியம் உள்பட 10 கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடும்ப அட்டையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், குடும்ப அட்டையை யாரும் ஒப்படைக்க வேண்டாம், மாறாக கோரிக்கை தொடர்பாக 10 பேர் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கலாம் என்றனர். இதையடுத்து கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 10 பேர் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X