என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்ட காட்சி
    X
    தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்ட காட்சி

    தூர்வாரும் பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

    தூர்வாரும் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
    அரியலூர்:

    தமிழக அரசு நீர்வளத் துறையின் சார்பில் தூர்வாரும் பணிகள் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், 

    பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் தூர்வார 16 பணிகள் 48.62 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள ரூ.100 லட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு தண்ணீர் வரும் காலத்திற்குள் பணிகளை முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக தா.பழூர் பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் பொன்னார் பிரதான வாய்காலின் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தா.பழூர், வாழைக்குறிச்சி, இடங்கண்ணி, பாலசுந்தரம், அண்ணகாரன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 

    இதனை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் சென்று பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிப்பதுடன், கரைகளின் மேல் போடப்படும் மண் மீண்டும் கீழே விழாதவண்ணம் கரைகள் பலமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×