என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படைத்தேரோட்டம் நடைபெற்றது.
    X
    படைத்தேரோட்டம் நடைபெற்றது.

    செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

    செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற செல்லியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாத சூழ்நிலையில் கொரோனா தொற்று தடை நீக்கம் செய்யப்பட்டதால் தற்போது தேர் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற தேர் திருவிழா கடந்த 2 ஆம் தேதி அய்யனார் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    அன்று முதல்  அம்மன் வீதி உலாவு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 ஆம் நாள் படைத் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கரகாட்டம் ஒயிலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

    தேர் திருவிழாவின் ஒன்பதாம் நாள் பெரும் தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதற்கான தேர் கட்டும் பணியினை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

    தேர் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இரும்புலிக்குறிச்சி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    Next Story
    ×