என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் மூழ்கி அரசு பள்ளி மாணவி பலி
    X
    ஏரியில் மூழ்கி அரசு பள்ளி மாணவி பலி

    தியாகதுருகம் அருகே ஏரியில் மூழ்கி அரசு பள்ளி மாணவி பலி

    தியாகதுருகம் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற அரசு பள்ளி மாணவி தண்ணீர் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை வயது (48).

    இவர் நேற்று தனது மனைவி அமுதா, மகள் ஓவியா (வயது 14). அதே பகுதியில் அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆகியோருடன் கலையநல்லூரில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றார். அப்போது தனது மகள் ஓவியாவை ஏரியின் கரையில் அமர வைத்து விட்டு ஏழுமலையும் அவரது மனைவியும் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர்.

    மீன் பிடித்துவிட்டு மீண்டும் வந்து மளைப்பார்த்த போது காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர்கள் ஏரியில் தேடிப்பார்த்தபோது ஓவியா தண்ணீரில் மூழ்கி மயக்கமடைந்த நிலையில் கிடந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×