என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்றுகளை நகர்மன்றத் தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் நட்டு வைத்தார்.
    X
    மரக்கன்றுகளை நகர்மன்றத் தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் நட்டு வைத்தார்.

    மரக்கன்றுகள் நடும் விழா

    தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி சீர்காழி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    சீர்காழி:

    தமிழக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவைக் கொண்டாடும் வகையில் சீர்காழி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சீர்காழியை அடுத்த எடமணல் நகராட்சி உரக் கிடங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பராயன், ஆணையர் (பொறுப்பு) ராஜகோபாலன், மேலாளர் காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    தொடர்ந்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பலன்தரும் மற்றும் பழவகை மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ரமாமணி, கஸ்தூரிபாய், ராமு, பாலமுருகன், முபாரக்நித்யா தேவி பாலமுருகன், ஜெயந்தி பாபு, ரஹமத் நிஷா மற்றும் பணி தள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ராஜகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×