என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள். ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்.](https://img.maalaimalar.com/Articles/2022/May/202205081418387364_Tamil_News_ARIYALUR-NEWS--THE-ROMANTIC-COUPLE-SOUGHT-PROTECTION-AND_SECVPF.gif)
X
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்.
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
By
மாலை மலர்8 May 2022 8:48 AM GMT (Updated: 8 May 2022 8:48 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
அரியலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டக்கல் தெரு அம்பேத்கர் நகர் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் மாதவன் (27) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள் ஐஸ்வர்யா வயது 23 என்பவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மாதவனும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்ய முடிவெடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மாரியம்மன் கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பெற்றோர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை செய்து பிரித்து விடுவார்களோ? என எண்ணிய புதுமண தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்து பெண்ணின் பெற்றோரிடம் திருமணம் சம்பந்தமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தனர். இருவரும் மேஜர் என்பதால் பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டக்கல் தெரு அம்பேத்கர் நகர் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் மாதவன் (27) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள் ஐஸ்வர்யா வயது 23 என்பவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மாதவனும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்ய முடிவெடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மாரியம்மன் கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பெற்றோர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை செய்து பிரித்து விடுவார்களோ? என எண்ணிய புதுமண தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்து பெண்ணின் பெற்றோரிடம் திருமணம் சம்பந்தமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தனர். இருவரும் மேஜர் என்பதால் பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)