search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தற்கொலைக்கு முயன்ற டிரைவர் கைது

    பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    உழவர்கரை பகுதியை சேர்ந்த சதீஷ் பெரியன் (வயது32) டிரைவர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

    இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-–மனைவிக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவரது மனைவி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    தனியாக இருந்து வந்த சதீஷ் பெரியன், (17) வயதுள்ள ஒரு சிறுமியை காதலித்து அவரை கர்ப்பமாக்கினார். இது குறித்த புகாரின் பேரில், சதீஷ் பெரியனை, ரெட்டியார்பாளையம் போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

    இந்நிலையில், சதீஷ் பெரியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். 

    பின்னர், தனது மனைவி குழந்தையுடன் சேர்ந்து வாழ வேண்டும்,  எங்களை சேர்த்து வையுங்கள் என உறவினர்களிடம் கூறி வந்தார். 

    அதன்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ் பெரியன், தனது குழந்தையை, கிருமாம்பாக்கம் அடுத்துள்ள கன்னியக்கோவில் புதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.  இருவரும் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். பின்னர், குழந்தையை, அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற உடன், குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  

    மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்தபோது, சதிஷ் பெரியன், தனது குழந்தையை, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

     இது குறித்து புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் கடந்த 14-ம் தேதி வழக்கு பதிந்து, சதீஷ்பெரியனை தேடி வந்தனர்.போலீசார் தேடுவதை அறிந்த சதிஷ் பெரியன் விழம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 
    அவர் புதுவை  அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை முடித்து நேற்று வெளியே வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×