என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து
Byமாலை மலர்7 May 2022 8:28 AM GMT (Updated: 7 May 2022 8:28 AM GMT)
திருக்கனூர் அருகே டிரைவரை பீர் பாட்டிலால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சித்திரம்பட்டு அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 41) டிரைவராக வேலைசெய்து வருகிறார்.
வேலை முடிந்து தட்சணா மூர்த்தி திருக்கனூர்-திருவண்ணாமலை மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது திருக்கனூர் புது நகரை சேர்ந்த ரியாஸ் மற்றும் அவரது நண்பர் சாரதி ஆகியோர் தட்சணா மூர்த்தியிடம் வீண் தகராறு செய்தனர்.
அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் தட்சணா மூர்த்தி ஏன் தேவையில்லாமல் பேசுகிறீர்கள் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட முயன்றார்.
ஆனால் அவர்கள் மீண்டும் தகராறு செய்து மோட்டார் சைக்கிள் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து தட்சணாமூர்த்தி தலையில் தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியதால் தட்சணா மூர்த்தி அலறல் சத்தம் போட்டார்.
உடனே ரியாசும் சாரதியும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருக்கனூரை சேர்ந்த சுமன் என்பவரின் உதவியுடன் மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின் இது குறித்து தட்சணாமூர்த்தி திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரியாஸ் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X