என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா

    புதுவையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது.

    கடந்த ஒரு மாதமாக யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பரவி வருகிறது. புதுவையில் 278 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

    இதில் புதுவையில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 8 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.  மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. 

    புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 16 லட்சத்து 92 ஆயிரத்து 143 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×