search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வர்த்தக சபை தலைவர் குணசேகரன் தலைமையில நிர்வாகிகள் மனு கொடுத்த போது எடுத்த படம்.
    X
    வர்த்தக சபை தலைவர் குணசேகரன் தலைமையில நிர்வாகிகள் மனு கொடுத்த போது எடுத்த படம்.

    வணிகர் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்

    புதுவையில் வணிகர்நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வர்த்தக சபையினர் வலியுறுத்தினர்.
    புதுச்சேரி:


    புதுவை வர்த்தக சபை வளாகத்தில் வணிகர் தின விழா நடந்தது. விழாவிற்கு வர்த்தக சபை தலைவர்  குணசேகரன் தலைமை தாங்கினார்.  பொதுச்செயலாளர் ஆனந்தன், இணை  பொது செ யலாளர் முகமது சிராஜ், பொருளாளர் வி.எம்.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் எல்.பி.ரவி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுவையில்– 3 தலைலமுறை களுக்கு மேலாக வியாபாரம் செய்யும் 12 வணிகர்களுக்கு வர்த்தக சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவித்தார். 
    நிகழ்ச்சியில் வர்த்தக சபை குழு உறுப்பினர்கள் தேவக்குமார், ஞானசம்பந்தம், நமச்சிவாயம், ராமமூர்த்தி உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வர்த்தக சபை தலைவர் குணசேகரன்ம ற்றும் நிர்வாகிகள் முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம்கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ‘புதுவையில்வ ணிகர் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். வர்த்தக மையம் அமைத்திட அரசு உதவிட வேண்டும்.

    புதுவை வணிகர்களுக்கு பொருட்கள் வாங்கிய வகையில் தர வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். வணிகர்கள் நலனுக்காக 100 அடி ரோட்டில் உள்ள பாலத்திற்கு கீழ் வாகன நிறுத்–தம் அமைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×