search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ம.தி.மு.க. 29-ம் ஆண்டு விழா நடைபெற்ற காட்சி.
    X
    ம.தி.மு.க. 29-ம் ஆண்டு விழா நடைபெற்ற காட்சி.

    புதுச்சேரியில் ம.தி.மு.க. 29-ம் ஆண்டு விழா

    புதுச்சேரியில் ம.தி.மு.க. 29-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை ம.தி.மு..க சார்பில் கட்சியின் 29-ம் ஆண்டு தொடக்கவிழா கொம்பாக்ககத்தில் நடந்தது. ம.தி.மு.க. தமிழ்மாநில தொழிற்சங்க செயலாளர் வேதா.வேணுகோபால் தலைமை வகித்தார். 

    ம.தி.மு.க. அமைப்பாளர் கபிரியேல் கட்சி கொடியேற்றி வைத்து
    50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கினார். தொடர்ந்து ஏழை மக்கள் 200 பேருக்கு பால் பாக்கெட்டுகள், பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, பழங்கள், இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செல்வராசு, இளங்கோ, கவுரி கருணாகரன், ஆதிமூலம், மாசிலாமணி, பிரபாகரன், செந்தில்குமார், கோவலன், ஜீவா, ரவிச்சந்திரன் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். சூசை நன்றி கூறினார். 

    இதே போல் ம.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
    Next Story
    ×