என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம்
Byமாலை மலர்6 May 2022 10:11 AM GMT (Updated: 6 May 2022 10:11 AM GMT)
தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி. பாப்ஸ்கோ ஊழியர் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாப்ஸ்கோ சங்க தலைவர் ரமேஷ் , செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயல் தலைவர் அபிஷேகம், ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம், நிர்வாகிகள் துரைசெல்வம், ஜெய்சங்கர், பத்மநாபன், கமிட்டி உறுப்பினர்கள் ஜீவரத்தினம், மார்க்கெழியன், அமுதா, ஆதி, அம்சவள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாப்ஸ்கோ தீபாவளி பஜார் மானியம் ரூ.62 லட்சத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும். பாப்ஸ்கோ மூலம் நடத்த ப்படும் 47 ரேஷன்கடை வாடகை தொகை ரூ.ஒரு கோடியே 30 லட்சத்தை குடிமைப்பொருள் வழங்கல்துறை உடனடியாக வழங்க வேண்டும். ரேஷன் அரிசி விநியோகத்துக்கு கிலோவுக்கு ரூ.1.20 வழங்க வேண்டும்.
பொங்கல் பொருட்கள் வழங்கிய கமிஷன் தொகையை பாப்ஸ்கோவுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இயக்குனர் அலுவலகத்தை போராட்டக்குழுவினர் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X