search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    கோடை வெயில் வாட்டிய நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    அரியலூர்:

    கடந்த ஒரு மாதமாக பகலில் கோடை வெப்பமும், இரவில் அதன் தாக்கமும் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள், குழந்தைகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கோடைக்காலத்தில், சூரியனுக்கு அருகில் பூமி செல்வதால்,

    வெப்பம் அதிகரிக்கும் அக்னி நட்சத்திரம் காலம் நேற்று தொடங்கியது. பகலில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன், மழை ெகாட்டித்தீர்த்தது.

    திருச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மாநகர், புறகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த மழை கொட்டியது.

    ஜங்சன், தில்லை நகர், ராம்ஜி நகர், ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும் புற நகரிலும் தொடர்ந்து மழை கொட்டியது. கடும் காற்றால்  பல்வறு இடங்களில் மரங்கள் விழுந்தன. குடிசைப்பகுதிகளில் மேற்கூரைகள் பறந்தன. பல இடங்களில் டிரான்ஸ்ாபார்மர்கள் வெடித்ததாலும் இணைப்பு கம்பிகள் அறுந்ததாலும் மின் தடை ஏற்பட்டது.

    இதே போல் நேற்றிரவு புதுக்கோட்டை நகரில் பலத்த காற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. மாவட்டத்தில் அன்னவாசல், கீரனூர், பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காற்றின் காரணமாக பல இடங்களில மின்சாரம் தடைப்பட்டது.

    கரூர் நகரில் நேற்று இரவு 7.20 மணிக்கு தொடங்கிய மழை 9.45 மணி வரை தொடர்ந்தது. பலத்த இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழையால் நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடியது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நன்பகுதில் அனல்காற்று வீசியது. இதனால் பஸ் நிலையம், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மாலை 4 மணி முதல் கருமேகங்கள் சூழந்து புறநகர் முழுவதும் மழை பெய்தது. ஆனால் அரியலூரில் மழை பெய்ய வில்லை.

    பெரம்பலூர் மாவட்டத்தில மாலை முதல் பரவலாக விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.
    Next Story
    ×