search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வழக்கை வாபஸ் பெறக்கோரி டிரைவர் மீது தாக்குதல்

    திருக்கனூர் அருகே வழக்கை வாபஸ் பெறக்கோரி டிரைவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே விநாயகம் பட்டு ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சுப்பையன் (வயது 53). இவர் சொந்தமாக மினி வேன் வைத்து செங்கல் ஜல்லி ஏற்றிச்செல்லும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் கண்டமங்கலம் அருகே பெரியபாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில்   செல்வராசு அப்பகுதியில் உள்ள மது கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த புருஷோத்தமன் தகாத வார்த்தைகளால் திட்டி வழக்கை வாபஸ் வாங்க மாட்டாயா என கூறி சுப்பையனை கையால் தாக்கினார். 

    அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து தாக்குதலில் காயம் அடைந்த சுப்பையன் மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

    பின்னர் இது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×