என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவிகளை கடத்திய வாலிபர்கள்
Byமாலை மலர்4 May 2022 11:16 AM GMT (Updated: 4 May 2022 11:16 AM GMT)
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவிகளை கடத்தியது தொடர்பாக திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையாங்குளம் கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் அந்த பகுதி அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 18 வயது நிரம்பிய இவரது சித்தப்பா மகள் அதே பள்ளியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக சென்ற 2 பேரும் வீடு திரும்பவில்லை. இவர்களை உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை.
இது குறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதில் அதே கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் தமிழ் செல்வன் (22) நன்னிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் அருண் (18) ஆகிய 2 பேரும் தங்கள் மகள்களை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையாங்குளம் கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் அந்த பகுதி அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 18 வயது நிரம்பிய இவரது சித்தப்பா மகள் அதே பள்ளியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக சென்ற 2 பேரும் வீடு திரும்பவில்லை. இவர்களை உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை.
இது குறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதில் அதே கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் தமிழ் செல்வன் (22) நன்னிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் அருண் (18) ஆகிய 2 பேரும் தங்கள் மகள்களை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X