என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரியில் 4 பேருக்கு கொரோனா

    புதுவையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில்  338 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருமே புதுவையை சேர்ந்தவர்கள். காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் தொற்று கண்டறியப்படவில்லை. 

    தொற்றால் பாதி க்கப்பட்ட யாரும் மருத்து வமனையில் அனு மதிக்கப்படவில்லை. வீட்டு தனிமையிலேயே வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது 9 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 3 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 2 பேர் புதுவை, ஒருவர் காரைக்காலை சேர்ந்தவர். 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 794 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 1962 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்த தகவல்களை சுகாதார த்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×